முதல் ஆளாக வந்த ரஜினி, அஜித் : ஓட்டு போட குவிந்த நடிகர், நடிகைகள்!!!

24th of April 2014
சென்னை::நடிகர் கமல் காலை 8 மணி வாக்கில் எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள வாக்குச்சாவடியில் கெளதமியுடன் வந்து ஓட்டு போட்டார்.
 
ரஜினியைப் போலவே நடிகர் அஜித்தும் காலை 7 மணிக்கே தனது மனைவி ஷாலினி மற்றும் அம்மா, அப்பாவுடன் குடும்ப சகிதமாக வந்து திருவான்மியூர் குப்பம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார்.
 
நடிகர் ஜீவன் கோபாலபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
நடிகர் பிரசன்னா விருகம்பாக்கத்தில் உள்ள புத்ரா மெட்ரிக் பள்ளியில் வாக்களித்தார்.

நடிகர் விஜய் காலை 10 மணி வாக்கில் அடையார் டெலிபோன் எக்ஞ்சேன்ச் அருகில் உள்ள பள்ளியில் ஓட்டு போட்டார். நடிகர் ஜீவா காலை 7 : 45 மணி வாக்கில் தி.நகரில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
 

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த நடிகர் செந்தில் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
ஒரு ஊருல ரெண்டு ராஜா படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகை விசாகா சிங் அந்தப் படத்தின் டைரக்டரிடம் பெர்மிஷன் வாங்கி மும்பைக்குச் சென்று வாக்களித்தார்.
 

24 வயதான நடிகர் கெளதம் கார்த்திக் இந்த தேர்தலில் தான் முதல் முறையாக வாக்களித்தாராம். இவர்கள் தவிர நடிகர் மனோபாலா, நடிகை குஷ்பு, நடிகை நீலிமா ராணி, தயாரிப்பாளர் யு டிவி தனஞ்செயன், டைரக்டர் ஹரி உட்பட திரையுலக பிரபலங்களும் வாக்களித்தனர்.
 

இவர்கள் தவிர நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் இன்று பிற்பகல் வாக்களிப்பார்கள் என்று அவர்கள் தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது...
 

சென்னை:தமிழகத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு ந்டைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவ்ர்களும் நடிகர் நடிகைகளும் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

முதல்-அமைச்சர்  ஜெயலலிதா இன்று காலை 9.10 மணிக்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வந்தார். அவருடன் சசிகலாவும் வந்திருந்தார். 9.15 மணி அளவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தனது வாக்கை பதிவு செய்தார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி. கோபாலபுரத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் இன்று ஓட்டளித்தார்

கோபால புரத்தில் உள்ள சாரதா பள்ளியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, அமிர்தம், செல்வம், செல்வி, அவரது மகள் எழிலரசி ஆகியோரும்  வந்து அதே வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி தயாநிதியும் ஓட்டளித்தார்

கனிமொழி எம்.பி. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. புனித எப்.ஆர்.எஸ். பெண்கள் பள்ளியில் காலை 8.30 மணிக்கு ஓட்டு போட்டார்.

காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் சிட்டாள்ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளியில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது மனைவி நளினி சிதம்பரத்துடன் வந்து வாக்களித்தார். அதுபோல காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தனது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி யுடன் வந்து வாக்களித்தார்.

ரஜினி இன்று கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக் கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு ஓட்டு போட வந் தார். காலை 7.15 மணிக்கு அவர் தனது ஓட்டை பதிவு செய்தார்.

நடிகர் கமலஹாசன் காலை 8 மணிக்கு ஆழ்வார்«பட்டை திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். அவருடன் நடிகை கவுதமியும் வந்து இருந்தார். இருவரும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டனர்.

நடிகர் அஜீத் மனைவி ஷாலினியுடன், திருவான் மியூர் குப்பத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகை குஷ்பு சாந்தோமில் உள்ள பள்ளியில் காலை 8 மணிக்கு ஓட்டு போட்டார்.

நடிகர் செந்தில், சாலி கிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் ஓட்டு போட்டார். நடிகர் விஜய், காலை 10 மணிக்கு அடையாறில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஓட்டு போட்டார். விஜய்யை காண ரசிகர்கள் குவிந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி னார்கள்.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தியாகராயநகர் இந்தி பிரசாரசப£வில் உள்ள வாக்குச்சாவடியில் பகல் 12 மணிக்கு ஓட்டு போட்டனர்.

சூர்யா, அஞ்சான் படப் பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டு இருந்தார். இன்று படப் பிடிப்பை ரத்து செய்து விட்டு காலை விமானத்தில் ஓட்டுப் போடுவதற்காக சென்னை வந்தார். சூர்யாவுடன் நடிகர் சிவகுமாரும் வாக்களித்தார்.

நடிகை சினேகாவும் இதே வாக்குசாவடியில் இன்று காலை 11 மணிக்கு ஓட்டு போட்டார்..
 

Comments