வாக்களிப்பதற்காக நடிகர்கள் கமல் - விஜய் சென்னை வந்தனர்!!!

24th of April 2014
சென்னை::மக்களவைத் தேர்தலில் வாக்களிப்ப தற்காக நடிகர்கள் கமலஹாசன், விஜய், அ ஜீத், சூர்யா, உள்ளிட்டோர்  தங்களது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னக்கு வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே அனைவரும் தங்களது வாக்குகளை அளிக்க உள்ளனர். தமிழகத்தில் நடிகர்களில் பலர் வெளி ஊர்களில் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க விரும்பியதால் படப்பிடிப்பை ரத்து செய்துவி்ட்டு சென்னை வந்துள்ளனர். இ வர்களில் கமல், விஜய், அஜீத், சூர்யா ஆகியோர் முக்கியமானவர்கள். நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் அருகில் உள்ள ஸ்டெல்லா மேரி  கல்லூரியில் வாக்களிக்கிறார்.
 
நடிகர் கமலஹாசன் பெங்களூரில் உத்தம வில்லன் படத்தில் பங்கேற்று நடித்து வந்தார். வாக்களிப்பதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் சென்னைக்கு வந்துள்ளார். இவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கிறார். வாக்களித்த உடனேயே அவர் பெங்களூர் புறப்பட்டு சென்று விடுவார். 
 
இதுபோல் நடிகர் விஜய் கத்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார். வாக்களிப்பதற்காக இவர் சென்னை வந்துள்ளார். அடையாறில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் இவர் வாக்களிக்க உள்ளார். நடிகர் சூர்ய அஞ்சான் படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமி்ட்டுள்ளார். கார்த்தியும் விளம்பர படத்துக்காக மும்பை சென்றுள்ளார். இவர்கள் இருவரும்  வாக்களிப்பதற்காக  சென்னை வந்துள்ளனர். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் உள்ள வாக்குச் சாவடியில் இவர்கள் வாக்களிக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சிவகுமார், நசிகை ஜோதிகா ஆகியோரும்  வாக்களிக் கிறார்கள்.

நடிகர் அஜீத் திருவான்மியூர் குப்பம் பகுதியில் உள்ள  வாக்குச் சாவடியில் தனது மனைவி ஷாலினியுடன் சென்று  வாக்களிக்கிறார். நடிகர் விஷால் அண்ணா நகரில் தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் வாக்களிக்கிறார். நடிகர் விக்ரம் பெசன்ட் நகரிலும், ஜெயம் ரவி பரத், ஆர்யா மற்றும் நடிகை திரிஷா ஆகியோரும் படப் பிடிப்பை ரத்து செய்துவிட்டு வாக்களிக்கிறார்கள்..

Comments